நேற்றிரவு இருளில் மூழ்கியது சென்னை: காரணம் என்ன? அமைச்சர் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் நேற்று இரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் , இரவு முழுவதும் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்., அண்ணா நகர், நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். ஒருசில இடங்களில் ஒருமணி நேரத்தில் மின்சாரம் வந்துவிட்டாலும் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே மின்சாரம் வந்தது.

இந்நிலையில் சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறினார். மேலும் மின் தடை நேரத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

மீண்டும் எம்.ஜி.ஆர் பெயருடன் களமிறங்கும் விஷால்

விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர் என்று கூறப்படும் 'மதகஜராஜா' என்ற திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகிவிட்டதால் இந்த படத்தின் பிரச்சனைகளை பேசி முடித்து விரைவில் வெளியிட முயற்சி செய

சமூக வலைத்தளங்களில் 'பாகுபலி 2' காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்

சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது...

வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.

ராகவா லாரன்ஸ் மிஸ் செய்ததை சமுத்திரக்கனி செய்வாரா?

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.