மகளின் தோழிக்கு பாலியல் கொடுமை...! அதிமுக பிரமுகர் கைது.....!

தன்னுடைய மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தான் 38 வயதான வேல்முருகன். தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக இருக்கும் இவருக்கு 10 வகுப்பு படிக்கக்கூடிய பெண் உள்ளார். அதே பகுதியில் உள்ள தன்னுடைய மகளின், தோழிக்கு மகள் போலவே வாட்ஸ்அப்-இல் மெசேஜ் அனுப்பி வந்துள்ளான். இதையடுத்து அந்தப்பெண்ணின் வீட்டிற்கு அருகிலே, வாடகை வீடு எடுத்து தங்கிய முருகன், அந்தசிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளான்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உண்டான அந்தச்சிறுமி, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார், வேல்முருகனை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் அவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசாரிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.