'பாகுபலி 2' படம் பார்க்க 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். தேசிய விருது இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.1700 கோடியை நெருங்கி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான அடூர் கோபால கிருஷ்ணன் பாகுபலி 2' படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து பேசியபோது, 'பாகுபலி போன்ற படத்தால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. இந்த படத்திற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய தயாராக இல்லை. ரூ.10 கோடியில் 10 படங்களும், ரூ.100 கோடியில் 100 படங்களும் எங்களால் எடுக்க முடியும்' என்று காட்டமாக விமர்சனம் செய்தார்

மேலும் 'பாகுபலி' திரைப்படம் கடந்த 1951ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மொழியில் வெளிவந்த 'பாதாள பைரவி' படத்தின் காப்பியே என்றும் அவர் கூறினார். உலகம் முழுவதும் போற்றப்படும் 'பாகுபலி 2' படம் குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினியின் 'காலா' இன்று முதல் வேற லெவல் படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது. மும்பை டான் மற்றும் முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது...

ரஜினியுடன் முதலமைச்சர் மனைவி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக சில கருத்துக்களை கூறினார். அதுமுதல் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வருகின்றனர்....

தனுஷின் 'விஐபி 2': டீசர் விமர்சனம்

தனுஷ், அமலாபால், நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைக்காத பெருமையை பெற்ற ஜிப்ரான்

சமீபத்தில் மரணம் அடைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் மிகப்பெரிய கவிஞராக அனைவராலும் போற்றப்படும் வகையில் இருந்தாலும் அவர் திரைப்படத்திற்கு இதுவரை ஒரு பாடல் கூட எழுதவில்லை.

ஆட்டுக்குட்டியின் பசிக்காக ரூ.66,000ஐ இழந்த பரிதாப நபர்

பொதுவாக ஒரு ஆட்டுக்குட்டியின் பசியை போக்க ரூ.50 அல்லது ரூ.100க்கு புல் வாங்கி போட்டாலே போதும்.