close
Choose your channels

துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் அவலம்… இன்னும் என்னென்ன நடக்குமோ?

Monday, August 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆப்கானிஸ்தான் மக்கள் தாலிபான்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று துப்பாக்கி முனைகளுக்கு நடுவே செய்தியாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார். இந்த வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பியோட நினைக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதைவிரும்பாத தாலிபான்கள் காபூல் விமான நிலையம் வரும் பொதுமக்களைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஒரேநாளில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை காபூல் விமான நிலையத்தில் நடத்தி ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலைய செய்தனர். இந்த விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 2,00 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் 24-36 மணி நேரத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்து இருந்தார். அவர் இப்படி எச்சரிக்கை விடுத்த ஒரு சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையத்தில் பெரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள் வான்வழி தாக்குதலுக்கு வெடிப்பொருட்களை நிரப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த வாகனம் வெடித்து சிதறியதாகக் கூறப்பட்டது.

இப்படி ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆங்காங்கே பதற்றமும், அவநம்பிக்கையும் வெறுப்புகளும் தற்போது கரைபுரளத் துவங்கி இருக்கிறது. அதிலும் இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொள்ள முடியாத சிறுவர்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.