அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலா??? விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் கவலை!!!

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதாகப் பரபரப்பு கிளம்பியது. இது மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தாது என்றாலும் தற்போது அசாம் உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இந்நோய்த்தொற்றால் உயிரிழந்து வருகின்றன. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதி மற்றும் உற்பத்தி கடுயைமாகப் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த வகை வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். தற்போதுவரை அசாம் மாநிலத்தில் 17 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டு இருக்கின்றன. காரணம் இந்நோய்த்தொற்றுக்கு முழுமையான தடுப்பூசி மருந்து எதுவும் கிடையாது. இந்நோயின் அறிகுறிகள் கிளாசிக்கல் ஸ்வைன் ஃப்ளூ போன்று இருந்தாலும் தென்ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சலின் தன்மை முற்றிலும் வேறாக இருக்கிறது என்றும் கிளாசிக்கல் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தை இந்நோய்க்கு பயன்படுத்த முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வடமாநிலங்களில் இந்நோய் பாதிப்பை குறைப்பதற்காக தற்போது மத்திய அரசு பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்து இருந்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கும் அசாம் மாநில அரசு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. காரணம் இது தொற்றுநோய் பாதுகாப்பு நடவடிக்கையை குறைத்துவிடும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தீவிரம் அடைந்து வருவதால் உயிரிழப்பு 100 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

நோய் பாதித்த விலங்குகளிடம் இருந்தோ அல்லது கழிவுபொருட்கள், தீவனம், குப்பை, சுகாதாரமற்ற முறைகளினால் பன்றிகளுக்கு இந்நோய் பரவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், மனசோர்வு, ரத்தகசிவு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை முதலில் ஏற்படுத்தும் இந்நோய்த்தொற்று மிக விரைவிலேயே விலங்குகளுக்கு மரணத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதால் 1 லட்சத்திற்கும் அதிகமான பன்றிகள் இறந்ததாகத் தகவல் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் அதேபோன்ற நிலைமை ஏற்படுமோ என அச்சம் எழுந்திருக்கிறது.

More News

நான் பாஜகவில் இணைந்ததிற்கு ரஜினி ஒரு முக்கிய காரணம்: பிரமிட் நடராஜன்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

சரித்திரம்‌ படித்திருந்தால்‌ இதெல்லாம் புரிந்திருக்கும்: விவசாயிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை

உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில்

இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளா??? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இருப்பதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அஜித் குறித்து வனிதாவின் டுவீட்: ரசிகர்களின் ரியாக்சன்

சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை வனிதா திருமணம் செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த திருமணம் குறித்து நடிகை கஸ்தூரி,

தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!

தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் நடித்த 'கர்ணன்' மற்றும் 'ஜகமே தந்திரம்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் போஸ்ட் புரொடக்ஷன்