close
Choose your channels

16 வருடங்களுக்கு பின் மீண்டும்.. சிம்பு எடுத்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம்!

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு 16 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒருமுறை படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வரும் சிம்பு, கடந்த 2006 ஆம் ஆண்டு ’வல்லவன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா உள்பட பலர் நடித்திருந்தனர் என்பது இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் படங்களில் நடிப்பதில் சிம்பு பிசியாகியதால் திரைப்படங்களை இயக்கவில்லை. இந்த நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாகவும் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்பு ஏற்கனவே ஒரு சில கதையை எழுதி வைத்திருப்பதாகவும் அதில் ஒரு கதையை தேர்வு செய்து இயக்குவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.