close
Choose your channels

30 வருடத்திற்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் அமலா: இயக்குனர், ஹீரோ யார்?

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘சத்யா’, ‘வெற்றி விழா’ பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்’, ‘இல்லம்’, ‘நாளைய மனிதன், சத்யராஜூடன் ‘ஜீவா’ வேதம் புதிது உள்பட பல முன்னணி நடிகர்களுடன் கடந்த 80கள், 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அமலா.

கடந்த 1991ஆம் ஆண்டு ’கற்பூர முல்லை’ என்ற படத்தை அடுத்து அவர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படத்தில் நாயகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி ரிதுவர்மா நடிக்கவுள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இந்த படத்தில்தான் ஒரு முக்கிய வேடத்தில் அமலா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.