close
Choose your channels

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

Wednesday, October 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

33 வருடங்களுக்கு பின் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது: ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

33 வருடங்களுக்கு பின்னர் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’தலைவர் 170’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் அமிதாபச்சன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் உடன் இருக்கும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். அதில், ‘33 ஆண்டுகளுக்கு பிறகு எனது வழிகாட்டியான அமிதாப்பச்சன் அவர்களுடன் மீண்டும் பணியாற்றுவதால் என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.