விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 'பேசும் படம்'

  • IndiaGlitz, [Friday,May 06 2022]

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 1987ஆம் ஆண்டு ’பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத படத்தில் நடித்த நிலையில் தற்போது 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு ’பேசும் படம்’ உருவாகவுள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகிய மூவரும் மணிரத்னம் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் இணைந்து நடித்த நிலையில் இதே மூவர் தற்போது ’காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். மராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர் எனப்வர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வசனமே இல்லை என்பதுதான் புதிய முயற்சி.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் அமலா நடிப்பில் உருவான ‘பேசும் படம்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் ’காந்தி டாக்ஸ்’ படமும் அதே போன்ற ஒரு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரியஸான சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கேலியும் கிண்டலுமாக உருவாக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தல' நடந்து வந்தால் 'பீஸ்ட்' விஜய் மாதிரி இருக்கும்: சொன்னது யார் தெரியுமா?

 'தல' நடந்து வந்தால் 'பீஸ்ட்' படத்தில் வரும் விஜய் மாதிரி இருக்கும் என பெங்களூர் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கடைசி நேரத்தில் திடீரென தள்ளிப்போன 2 படங்கள்: அதில் ஒன்று பிரபல நடிகரின் படம்!

 இந்த வாரம் 6 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு திரைப்படங்கள் கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் ரசிகர்களுக்கு

'குக் வித் கோமாளி' செட்டுக்கு வரும் பிரபல நடிகர்: போட்டியாளர்கள் உற்சாகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': முக்கிய தகவலை பகிர்ந்த அருண்ராஜா காமராஜ்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிய 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனை அடுத்து தற்போது இந்த

சுசீந்திரன் இயக்கும் பான் - இந்தியா திரைப்படம்: ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் 'வீரபாண்டியபுரம்' மற்றும் 'குற்றம் குற்றமே' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.