close
Choose your channels

39 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விருது: 'தேவர் மகன்' நடிகை பெருமிதம்!

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

39 வருடங்களுக்கு பின் தனக்கு விருது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி என ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரேவதி, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு 'கட்டத்தே கிளிக்கூடு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் ஆஷா என்ற கேரக்டரில் அறிமுகமான ரேவதி, 39 வருடங்கள் கழித்து அதே மலையாள திரையுலகில் ’ பூதகாலம்’ என்ற படத்தில் ஆஷா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக கேரள அரசின் விருதினை ரேவதி பெற்றுள்ளார்.

நடிகை ரேவதி ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'தேவர்மகன்’ என்ற திரைப்படத்திற்காக சிறந்த சப்போர்ட்டிங் நடிகை என்ற தேசிவிருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.