ஐபிஎல் 2020: 50 போட்டிகள் முடிந்தும் உறுதி செய்யப்படாத பிளே ஆப் அணிகள்!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக தொடங்கினாலும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் உள்ள இளைஞர்கள் தங்களுடைய ஸ்பார்க்கை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் அதிரடி ஆட்டங்கள், அசரவைக்கும் சிக்ஸர்கள் இந்த ஆண்டு அதிகம் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்றுடன் ஐபிஎல் போட்டியில் 50 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. ஆனால் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை மட்டுமே தகுதி பெற்றுள்ளது என்பதும் சென்னை மட்டுமே தகுதி பெறாத அணி என்பதும் தெரியவந்துள்ளது

பிளே ஆப் சுற்றில் தகுதிபெறும் இன்னும் மூன்று அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாக தெரியாத வகையில் உள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகளே மீதமிருக்கும் நிலையில் அந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் அணிகள் பெரும் ரன்ரேட் அடிப்படையில்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அடுத்த மூன்று அணிகள் குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

50 போட்டிகள் முடிந்தும் பிளே ஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி மட்டுமே தகுதி பெற்று உள்ளதால் அடுத்து வரும் 6 போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 12 போட்டிகளில் விளையாடிய பெங்களூர், டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளையும், 12 போட்டியில் விளையாடிய ஐதராபாத் அணி 10 புள்ளிகளும் பெற்றுள்ளன. 13 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த ஆறு அணிகளில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்று அணிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தப்பிக்கும் ஐவர் யார் யார்? அதிக ஓட்டுக்கள் இவர்களுக்குதான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: சொன்னபடி தற்கொலை செய்த வங்கி அதிகாரி!

பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தனக்கு வேலை கிடைத்தால் தனது உயிரையே காணிக்கையாக தருவதாக நேர்த்திக்கடன் நேர்ந்ததாகவும்

லட்சுமி பாம்: புதிய டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிய 'லட்சுமி பாம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரான நிலையில், இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை

குருப்பிஸம், ஃபேவரிஸம்: அர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த ஆரி

நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் சரியாக பெர்பாமன்ஸ் செய்யாத மோசமான போட்டியாளர்களாக அனிதா மற்றும் ஆரி தேர்வு செய்யப்பட்டனர்

வருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்: ரஜினி அரசியல் குறித்து பிக்பாஸ் நடிகை

ரஜினிகாந்த் அரசியல் வருவாரா? மாட்டாரா? என்பதை கமல் பாணியில் கருத்து சொன்ன பிக்பாஸ் நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது