696 நாட்களுக்கு பின் மீண்டும் கேப்டனாகிய தல தோனி

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

கிரிக்கெட் ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார். 696 நாட்களுக்கு பின் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டிகளில் வென்ற இந்தியா, சூப்பர் 4 சுற்றிலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டதால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை நல்ல வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்டக்கது.

எனவே இன்றைய போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியின் கேப்டனாக மீண்டும் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தோனி கேப்டனாக பொறுப்பேற்கும் 200வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கேப்டனாக விளையாடிய தோனி இந்திய அணிக்காக 110 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். 74 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டி டை ஆகவும், 11 போட்டிகள் முடிவு இல்லாமல் நின்றது. மொத்தத்தில் ஒரு கேப்டனாக தோனியின் வெற்றி சதவிகிதம் 55.28 என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் ரீமேக்கில் சீயான் விக்ரம்?

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சாமி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது

காதலும் நட்பும்: ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு படும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு பேரை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்பதால்