close
Choose your channels

விஜய், அஜித்தை அடுத்து இன்னொரு மாஸ் நடிகருடன் இணையும் த்ரிஷா.. விரைவில் அறிவிப்பு..!

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் அவருடன் நடிக்க வந்த நடிகைகள் தற்போது அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதும், பலர் திரை உலகை விட்டு சென்றுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் த்ரிஷா இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் அவர், அடுத்ததாக அஜித்தின் ’விடாமுயற்’சி படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’கமல்ஹாசன் 234’ படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 50 வது படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படம் த்ரிஷாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் உடன் த்ரிஷா ’கொடி’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.

மேலும் அஜித்தின் 50 வது படமான ’மங்காத்தா’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது தனுஷின் 50 வது படத்திலும் த்ரிஷா தான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ் என மாஸ் நடிகர்களுடன் அடுத்தடுத்து த்ரிஷா நடிக்க இருப்பதால் அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகில் பிசியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.