அமிதாப்பை அடுத்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா: ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சன் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு வெளிவந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானது

மேலும் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமிதாப்பின் மகனும் பிரபல நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் கொரோனா அறிகுறி லேசாக இருப்பதாகவும், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐஸ்வர்யாராய், ஆராதனா, ஜெயாபச்சன் ஆகியோர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

More News

சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

சீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கஜகஜஸ்தானில் குடியிருக்கும் சீன மக்களுக்கு நேற்று ஒரு ரகசிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்கள்: சிபிசிஐடி குறித்து சுசித்ரா திடுக் தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டா விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவும்

தங்கக்கடத்தல் அரங்கேறுவது எப்படி??? கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் புதிய சர்ச்சை!!!

கேரள முதலமைச்சரின் செயலாளர் முதற்கொண்டு முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாக தற்போது கேரளாவின் தங்கக்கடத்தல் வழக்கு மாறியிருக்கிறது

கட்டப்பா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர்: விஜயேந்திர பிரசாத் தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்த 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி,