அமிதாப், ரன்வீர்சிங்கை அடுத்து கார்த்தி தான்: சொன்னது யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அமிதாப் பச்சன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர்களை அடுத்த கார்த்தியுடன் பணி புரிவதையே நான் மிகவும் விரும்புகிறேன் என பிரபல ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கூறியபோது, ‘அமிதாப்பச்சன் மற்றும் ரன்வீர் சிங் இவர்களை அடுத்து நான் பணிபுரிய விரும்பும் ஹீரோ கார்த்தி தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஒரு திரைப்படத்தை மணிரத்னம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்றும் இந்த படம் புதிய தலைமுறை தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஒரு திறமையான இயக்குனரின் கூட்டு முயற்சியால் உருவானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.