'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி மட்டுமின்றி அவரது குடும்பமே இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்துள்ளனர். எனவே தற்போது படம் வெளியாக வெற்றியும் பெற்றுவிட்டதால் ரிலாக்ஸ் ஆக இருக்கும் ராஜமெளலியும் அவரது குடும்பத்தினர்களும் ஓய்வு எடுக்க நேற்று லண்டனுக்கு பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

லண்டனில் பத்து நாட்கள் ராஜமெளலி தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் நாடு திரும்புவார் என்றும், அதன் பின்னர் அவர் தனது அடுத்த படம் குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

யாராவது இந்த கேள்வியை கேட்டால் கன்னத்தில் பளாரென அறையுங்கள். பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதாவின் மர்ம மரணம், கருணாநிதியின் உடல்நிலை, சசிகலா-தினகரன் ஜெயில், அதிமுகவில் பிளவு என தமிழகம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இவை குறித்து பெரிதாக எந்தவித விமர்சனமும் செய்யாதது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகமிழக்க செய்துள்ளது...

இவர்கள் இருவரும் இணைந்தால் 'அவதார்' சாதனையை முறியடிக்கலாம். அல்போன்ஸ்புத்ரன்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்தது. முதல் பாகம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது பாகமும் வெளியான 4 நாட்களிலேயே ரூ.300 கோடியை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாரா சுகேஷ் சந்திரா?

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் டெல்லி போலீசார் மிக தீவிரமாக தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்...

நாம் செய்ய தவறியதை பைரஸியினர் சரியாக செய்கின்றனர். எஸ்.எஸ்.ராஜமெளலி

இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகினர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பைரஸி. குறிப்பாக் கோலிவுட்டில் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. படம் ரிலீஸ் தினத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்வது, ரிலீஸ் தினத்தன்றே திருட்டுவிசிடி, இணையதளத்திலும் ரிலீஸ் ஆவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை ஒழிக்க நடிகர் சங்கமும், தயாரி

சென்னையை அதிர வைத்த 'பாகுபலி 2' வசூல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாக்ஸ் ஆபிசில் சுனாமியை ஏற்படுத்திவிட்டது.