close
Choose your channels

'பீஸ்ட்' படத்தை அடுத்து மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்: எந்த படம் தெரியுமா?

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவர் வில்லனாக மிரட்டி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் மிகச்சிறப்பாக செல்வராகவன் நடித்ததை அடுத்து அவருக்கு மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் அடுத்த படத்தில் தான் செல்வராகவன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள செல்வராகவன் விரைவில் தனுஷ் நடிக்கவிருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தையும் அவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் இயக்குனராகவும், இன்னொரு பக்கம் நடிகராகவும் பிஸியாகி வரும் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.