close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கேபிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

106 நாள்களாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியின் வின்னர் ஆக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

வின்னர் ஆரி ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் அதே போல் சூர்யாவின் பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னதாக ரூ.5 லட்சத்தை பெற்று கொண்டு வெளியேறிய கேபிரில்லாவுக்கு தற்போது புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற ஷோக்களில் ஒன்றான ’முரட்டு சிங்கிள்’ சென்ற ஷோவில் நடுவராக கேபி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்து தனக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் பிக்பாஸ் போட்டியாளர்களான யாஷிகா மற்றும் அபிராமி நடுவர்களாக இருந்த நிலையில் தற்போது அடுத்த சீசனில் கேபி நடுவராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.