பிரேக் அப்பிற்கு பின் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா - விஜய் வர்மா.. வைரல் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரேக்கப்புக்கு பிறகு முதல் முறையாக, இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தனித்தனியாக வந்ததாக தெரிகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் ஏற்பாடு செய்த ஹோலி நிகழ்ச்சியில், பல பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு நடிகை தமன்னா வருகை தந்தார். அதேபோல், விஜய் வர்மாவும் வருகை தந்தார். இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சிக்கு வந்ததுடன், தனித்தனியாகவே அந்த இடத்தில் ஹோலியை கொண்டாடியதாக தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்றும், தனித்தனியாகவே தங்கள் சமூக வலைதளங்களில் ஹோலி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவர்கள் நேருக்கு நேர் சந்தித்து பேசவில்லை என்பதால், பிரேக்கப் தொடர்பான செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com