சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்

நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் இதுகுறித்து சீன அரசு மற்றும் சீன ராணுவம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சீனா எல்லையில் ஒரு பக்கம் பதட்டம் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நவ்காம் என்ற பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததால் இந்திய பாகிஸ்தான் எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே சமீபத்தில் நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் இந்திய பகுதியையும் சேர்த்து புதிய வரைபடத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் சிஏஏ சட்டத்திற்குப் பின்னர் வங்கதேசம் இந்தியா மீது கடும் அதிருப்தியில் உள்ளது

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் எதிரி நாடுகள் இல்லை என்றாலும் அவை நெருங்கிய நட்பு நாடுகள் என்றும் சொல்ல முடியாத வகையில் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடிகளை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

அணுஆயுதம் அதிகமாக வைத்திருக்கும் நாடு: சீனாவா??? இந்தியாவா???

உலக நாடுகளிடையே அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையாகப் பார்க்கப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தங்களது ஆயுதப் படைகளை வலுப்படுத்திக் கொண்டே வருகின்றன

என்னால ஏசி இல்லாம இருக்க முடியாது: கொரோன டெஸ்ட் எடுக்க டிக்டாக் பிரபலத்தால் பரபரப்பு

நான் சிங்கப்பூரில் ஏசியில் இருந்து பழகி விட்டதால் என்னால் சாதாரண அறையில் டெஸ்ட் எடுக்க வர முடியாது என்றும், சிறப்பு அறை வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டால்,

சுஷாந்த்சிங் மரணம்: பாலிவுட்டை மறைமுகமாக தாக்கினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பது தெரிந்ததே

குளிக்கும்போது ஆபாசப்படம் எடுத்ததால் தீக்குளித்த 10ஆம் வகுப்பு மாணவி மரணம்

வேலூரில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த 3 இளைஞர்கள் அவரை மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.

தெருக்குத்தெரு புதிதாக முளைத்த மாஸ்க் வியாபாரிகள்!!! தரம் குறித்த அச்சம்!!!

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறையை வகுத்து இருக்கிறது.