close
Choose your channels

டிடியை அடுத்து சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கி வரும் மூன்று நாயகன் மற்றும் மூன்று நாயகிகள் திரைப்படத்தில் நேற்று டிடி இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் டிடியை அடுத்து தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது சகோதரி கேரக்டரில் விஜய் டிவி பிரபலம் டிடி என்கிற திவ்யதர்ஷினி நடித்து வருகிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா சண்முகநாதன் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை குஷ்புவின் அவ்னிசினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.