துபாயை அடுத்து பிரியங்கா மோகன் சென்ற அடுத்த நாடு: வைரல் வீடியோக்கள்


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் நெல்சன், நடிகர் கவின், நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்களுடன் சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் துபாய் சென்றார் என்பதும், அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நடிகை பிரியங்கா மோகன், தற்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் தனது தோழிகளுடன் எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த பிரியங்கா மோகனுக்கு இரண்டுமே வெற்றிப் படங்கள் ஆகியுள்ளதால் அவர் ராசியான நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு உள்ளார். அதேபோல் சூர்யாவுடன் நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், பிரியங்கா மோகன் அடுத்த சில வருடங்களில் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.