துல்கர், ஜெயம்ரவியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு நடிகரும் விலகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் படத்தில் அல்லது மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும் நிலையில் இந்த இருவரும் இணையும் படத்தில் நடிப்பது என்பது மிகவும் அபூர்வமாக கிடைக்கும் வாய்ப்பு என்பது திரையுலகினர் அனைவரும் தெரிந்ததுதான். அந்த வகையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற துல்கர் சல்மான் மற்றும் ஜெயராம் ரவி ஆகிய இருவரும் அடுத்தடுத்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் ’தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் இருந்து நடிகர் சித்தார்த் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் தங்களுடைய கால்ஷீட்டை படக்குழுவினர் வீணாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் சித்தார்த்தும் அதே குற்றச்சாட்டை தான் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சித்தார்த் கேரக்டருக்கு மணிரத்னம் யாரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கமல் - மணிரத்னம் படத்தில் அடுத்தடுத்து பிரபல நடிகர்கள் விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தனுஷை மகன் என கோரிய மதுரை தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

நடிகர் தனுஷை தனது மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாவின் 'வணங்கான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்

'சிங்கம் 4' படம் குறித்து ஏமாற்றமான செய்தி சொன்ன ஹரி.. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தின்  இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியாகி

உறுதியாகிவிட்டதா 'ஜெயிலர் 2' படம்? டைட்டில் நியூஸ் எல்லாம் வந்துருச்சே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

'தக்லைஃப்' படத்திற்காக கெட்டப்பை மாறுகிறாரா சிம்பு? அப்ப 'எஸ்டிஆர் 48' என்ன ஆச்சு?

சிம்பு நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் 48' என்ற படம் உருவாக