பிக்பாஸ் சேரனின் நெகிழ்ச்சியான பதிவு

இயக்குனர் சேரன் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்று புகழ் பெற்றிருந்தாலும் இன்றைய தலைமுறையினர்களுக்கு சேரன் என்றால் பிக்பாஸ் சேரன் என்று தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் அவரது நடத்தையும் நற்பண்பும் வெளியிட்டன.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சேரன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பதிவு செய்துள்ளார் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.

இந்த பதிவிற்கு லைக்ஸ்களூம், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியால் சேரன் மீண்டும் கோலிவுட் திரையுலகில் மீண்டும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அவரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் படத்திற்கு தமிழக அரசு விளம்பரம்: பிக்பாஸ் நடிகை கமெண்ட்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு

பிகில் இசை வெளியீட்டு விழா: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள்

தர்ஷனுக்கு முடிசூட்டு விழா! இறுதிப்போட்டிக்கு முன்னரே வெற்றி விழாவா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த மூன்றாவது சீஸனில் தர்ஷன், பிக்பாஸ் டைட்டில் கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் கமல் படத்தில் வடிவேலு?

கமலஹாசன் நடித்த சிங்காரவேலன், தேவர்மகன், காதலா காதலா ஆகிய படங்களில் அவருடன் இணைந்து நடித்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத விருந்தினர்கள்: போட்டியாளர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நடைபெற உள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 6 பேர் இருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது