நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் களத்தில் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்!

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் நடராஜன் மீதான நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நடராஜன் 14ஆவது சீசன் போட்டிகளில் கலந்துகொண்டு வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய நடராஜன் பெங்களூர் கிரிக்கெட் அகாடமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக டிவிட் செய்திருந்த நடராஜன் தற்போது 5 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் கடந்த 5 மாதத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கிறேன். மேலும் அறுவை சிகிச்சை முடிந்து முதல்முறையாக ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறேன். இதனால் படு உற்சாகம் அடைந்திருக்கிறேன். அணிக்கு எனது சிறப்பான பங்களிப்பை செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 19 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள இந்தப் போட்டியில் நடராஜனின் அடுத்த அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் சிங்கர் வைல்ட்கார்டில் வெற்றி பெற்றவர் யார்? மானஸியின் ஆனந்தக்கண்ணீர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது என்பதும்

அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் கிடைப்பது என்ன? பூஜா ஹெக்டேவின் வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடுமையாக உழைத்தால் ஒரு நாள் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

சர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்!

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டார்கள் என்பதும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆபாச பேச்சு காரணமாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

ஐபிஎல் கேப்டன்ஷி பதவிக்கும் சிக்கலா? கோலி குறித்த அடுத்த பரபரப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று பரபரப்பை கிளப்பி வருகிறார்