close
Choose your channels

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்ஷன் களத்தில் இறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்!

Saturday, September 18, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் நடராஜன் மீதான நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நடராஜன் 14ஆவது சீசன் போட்டிகளில் கலந்துகொண்டு வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய நடராஜன் பெங்களூர் கிரிக்கெட் அகாடமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக டிவிட் செய்திருந்த நடராஜன் தற்போது 5 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் கடந்த 5 மாதத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கிறேன். மேலும் அறுவை சிகிச்சை முடிந்து முதல்முறையாக ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறேன். இதனால் படு உற்சாகம் அடைந்திருக்கிறேன். அணிக்கு எனது சிறப்பான பங்களிப்பை செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 19 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள இந்தப் போட்டியில் நடராஜனின் அடுத்த அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.