close
Choose your channels

ஹனிமூன் முடிந்தவுடன் மனைவியை வேண்டாமென்ற கணவர்: பெங்களூரில் பரபரப்பு

Wednesday, March 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் முடிந்து ஹனிமூன் முடிந்தவுடன் மனைவி அழகாக இல்லை என்று சொல்லி விவாகரத்து கேட்ட கணவர் ஒருவரால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் சசிகுமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் ஆனது. திருமணமாகி ஹனிமூன் எல்லாம் கொண்டாடிவிட்டு, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் திடீரென தனது மனைவியிடம் ’நீ அழகாக இல்லை உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடு’ சசிகுமார் கேட்டதால் விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். 

சசிகுமார் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் மனைவி விஜயலட்சுமியிடம் விவாகரத்து பெற்று விட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதையும் அறிந்து விஜயலட்சுமி அதிர்ச்சி அடைந்து விவாகரத்து தர முடியாது என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் விஜயலட்சுமியை கொடுமைப்படுதியதாகவும், இதனையடுத்து விஜயலட்சுமி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் விஜயலட்சுமியின் பெற்றோர் மகளை சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் வாழுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தொடர்ந்து விஜயலட்சுமியை துன்புறுத்தி வந்த சசிகுமார் ஒரு கட்டத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து விஜயலட்சுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகுமார் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.