close
Choose your channels

கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே கூட்டி வந்த பிரபலம்: வைரல் புகைப்படம்

Wednesday, August 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனா தனது கணவர் இறந்து 40 நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது அவர் வெளியே வந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தையை இழந்த நடிகை மீனா, சமீபத்தில் தனது கணவரையும் இழந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில் கணவரை இழந்த சோகத்தில் உள்ள மீனாவை ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவரது தோழிகள் பலர் முயன்றனர். குறிப்பாக கலா மாஸ்டர் அவருக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரம்பா சமீபத்தில் மீனாவை சந்தித்தார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்களை இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் ரம்பா, கலா மாஸ்டர், மீனா ஆகியோர் சமீபத்தில் கடற்கரைக்கு சென்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே அழைத்து வந்த அவரது தோழிகள் மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.