close
Choose your channels

'விக்ரம்' வெற்றி எதிரொலி: 'இந்தியன் 2' படத்தை அடுத்து புத்துயிர் பெறும் இன்னொரு படம்!

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம் 2’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் ’விக்ரம்’. இந்த படம் கமல்ஹாசனே எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ’விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றி காரணமாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் செய்தி வெளியானது. அனேகமாக இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து இயக்கும் இன்னொரு படமான ’சபாஷ் நாயுடு’ திரைப்படமும் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புத்துயிர் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெய கிருஷ்ணா ஆகியோர் தங்களது சொந்த காரணங்களாக இந்த படத்தில் இருந்து விலகினார்கள். அதனை அடுத்து கமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் ’சபாஷ் நாயுடு’ படத்தை மீண்டும் தொடங்கும் எண்ணம் இருப்பதாகவும் அந்த படத்தின் அறிவுசார் சொத்துரிமை தன்னிடம் தான் உள்ளதாகவும் தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ’சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கமல் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.