close
Choose your channels

'கைதி'யை அடுத்து முடிவுக்கு வந்த கார்த்தியின் அடுத்த படம்

Saturday, July 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'கைதி' திரைப்படத்தை அடுத்து ஜோதிகாவுடன் கார்த்தி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 'பாபநாசம்' படம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா-தம்பியாகவும் இவர்களின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டு வரும் அக்டோபரில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த ஆண்டுக்குள் கார்த்தியின் இரண்டு படங்கள் வெளியாவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.