மூன்று வருடங்களுக்கு மீண்டும் மோதும் விஜய்-விஷால் படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 19 2017]

கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நடித்த 'கத்தி' மற்றும் விஷால் நடித்த 'பூஜை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது 2017ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஷால் நடித்த முதல் மலையாள திரைப்படமான 'வில்லன்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மோகன்லால், மஞ்சுவாரியர், ஹன்சிகா நடித்த இந்த படத்தில் விஷால் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே தினத்தில் இயக்குனர் சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்,' சசிகுமாரின் 'கொடி வீரன்', மற்றும் நயன்தாராவின் 'அறம்' ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. 'மெர்சல்' உள்பட இந்த தீபாவளிக்கு வெளியாகும் அனைத்து படங்களுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் என்பதால் இந்த பட்டியலில் எந்த படம் வசூலிலும் மக்கள் மனதிலும் முதலிடத்தை பிடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மூத்த பாஜக தலைவர் கருத்து

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் 2 வாரத்தில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

மகேஷ்பாபுவுடன் விஜய், விஜய்யுடன் விக்ரம்: புதுமையான கூட்டணி

இன்றைய கோலிவுட் திரையுலகினர் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது பல நிகழ்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண் எம்.எல்.ஏவிடம் பாராட்டு பெற்ற 'மகளிர் மட்டும்'

கடந்த வாரம் வெளிவந்த ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி பல விஐபிக்கள் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கார்த்தியின் 'தீரன் அத்தியாயம் ஒன்று' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகர் கார்த்தி நடித்து வரும் 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாகும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று பரவலாக செய்திகள் கடந்த சில நாட்களாக பரவியது

நியூயார்க்கில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா பிறந்த நாள் கொண்டாட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தின் படப்பிடிப்பின்போதே விக்னேஷ்சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்பட்டது.