கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த மேலும் ஒரு அமைச்சர்

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மீது வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் அமைச்சர்கள் கமல்ஹாசனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு அவரை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்தார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊழல் குறித்து கமல் பதிவு செய்த டுவீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த டுவீட் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்றப்போது மீண்டும் கமல்ஹாசனை ஒருமையில் அதாவது 'அடப்போங்கப்பா அவனைப்போய்' என்று கூறி நிருபரது மைக்கை தட்டிவிட்டு சென்றுவிட்டார்.
வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் தவறை சுட்டிக்காட்ட உரிமை உள்ள நிலையில் அரை நூற்றாண்டு திரைப்படத்திற்காக சேவை செய்தவர், ஒழுங்காக வரிகட்டும் ஒரு பிரஜை, மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவரை 'அவன்', இவன்' என்று ஏக வசனத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் விமர்சிப்பதை அரசியல் விமர்சகர்கள் கண்டித்து வருகின்றனர். குற்றச்சாட்டிற்கு சரியான பதில் கூறுவதுதான் அமைச்சரின் கடமையே தவிர, ஏக வசனத்தில் பேசி குற்றச்சாட்டை திசை திருப்புவது அழகல்ல என்பதை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

மூன்றாம் பிறை' ஸ்ரீதேவிக்கு இணையான கேரக்டர்: பலூன் பட நடிகை பெருமிதம்

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிரபல நடிகை!

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில்  வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது...

மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

பேசும் படம்: வெள்ளத்தில் மூழ்கினாலும் மூழ்காத தேசிய பற்று

இந்திய மக்கள் மொழி, இனம், மதம், ஜாதி போன்ற பலவகைகளில் பிரிந்து இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது...

விபத்து நடந்த ரயில் முன் செல்பி எடுத்த மீட்புப்படையினர்களுக்கு தண்டனை

உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர் வரை அனைவரையும் பிடித்துள்ள ஒரு நோய் 'செல்பி'...