close
Choose your channels

'லால் சலாம்' படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினி செய்ய போவது இதுதான்..!

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் மீண்டும் ’ஜெயிலர்’ படத்தின் பணிகளுக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ’லால் சலாம்’ படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பை முடித்தவுடன் சென்னை திரும்பியவுடன் ’ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் அவர் ’ஜெயிலர்’ படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்குவார் என்றும், டப்பிங் முடிந்ததும் அவர் அடுத்த படத்துக்கு தயாராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

‘லால்சலாம்’ மற்றும் ஜெயிலர் படத்தின் பணிகளை முடித்தவுடன் அவர் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos