3 மாதம் லிவிங் டுகெதர்.. அப்புறம்தான் கல்யாணம்.. டிடிஎப் வாசன்..

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

பைக்கில் செல்லும் போது வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதம் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு அதன் பிறகு தான் திருமணம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பைக்கில் வீலிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமான டிடிஎப் வாசன், சமீபத்தில் ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதையடுத்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் சாகசம் செய்தார். அப்போது அவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உட்பட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீண்ட முயற்சிக்கு பின்னர் அவருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளார்

இந்த நிலையில் சிறையில் இருக்கும் போது தனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் மூன்று மாதம் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதரில் இருந்து விட்டு அதன் பின்னர்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் ஏனென்றால் நான் லைப்பில் நிறைய பார்த்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

திடீரென மும்பை கிளம்பி சென்ற ரஜினிகாந்த்.. படப்பிடிப்பும் இல்லையாம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை சென்ற நிலையில் அங்கு 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த்

விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கூறிய போட்டியாளர்.. எட்டி உதைத்ததால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கேப்டன் தினேஷ் கூறியதை அடுத்து விஷ்ணு ஆத்திரமாகி அருகில் இருந்த பொருளை எட்டி உதைத்த

8000 துணை நடிகர்கள்.. ஹாலிவுட் தரம்.. ஷங்கரின் பிரமாண்ட படப்பிடிப்பு..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பின் 'கங்குவா' தான்.. வேற லெவல் டெக்னாலஜி..!

தமிழ் திரை உலகை பொருத்தவரை 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'லியோ' படங்கள் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக சூர்யா நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தையும் ஐமாக்ஸ்

110 நாட்கள் தொடர் படப்பிடிப்பு.. தனுஷின் 'D50' படத்தின் தற்போதைய நிலை என்ன?

 தனுஷ் நடித்து இயக்கி வரும்  'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.