close
Choose your channels

'மாநாடு' வெற்றியால் பிரேம்ஜிக்கு அடித்த ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் சிம்பு, இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து இருந்தாலும் திருப்புமுனை கேரக்டரில் நடித்திருந்த பிரேம்ஜிக்கு தற்போது ஜாக்பாட் அடித்திருப்பதாக கூறப்படுகிறது. ’மாநாடு’ என்ற திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தில் உள்ள அனைவருக்குமே வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் பிரேம்ஜிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் அவருக்கு சாதாரண கேரக்டர் இல்லை என்றும் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான ஒரு முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார் என்பதும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் அனேகமாக ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.