close
Choose your channels

டாக்டர் மகேந்திரனை அடுத்து திமுகவை இணைகிறாரா பத்மப்ரியா?

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் அந்த கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி ஆட்சியை பிடிக்காவிட்டாலும் ஓரளவிற்கு தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக கமல்ஹாசனே கோவை தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பதும், அவரது கட்சி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஒருசிலர் திடீரென்று கட்சியில் இருந்து விலகியதால் மக்கள் நீதி நீதி மய்யம் கட்சி சிக்கலில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலை தற்போது அக்கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலமான பத்மபிரியாவும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.