மாபா பாண்டியராஜனை அடுத்து ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக விஐபி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அணி நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வந்த நிலையில் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் வலுத்து வருகிறது. இன்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் முதல்வருக்கு ஆதரவு அளித்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் தனது ஆதரவை ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் எம்.எல்.ஏவுமான கே.நட்ராஜ் அவர்களும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாகவும், அவர் அனேகமாக இன்று மாலை முதல்வரை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிமிடத்துக்கு நிமிடம் ஓபிஎஸ் அவர்களின் அணி வலுத்து வருவதும், சசிகலா அணி வலுவிழந்து வருவதுமாக உள்ளதால் தமிழக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.