close
Choose your channels

ஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்

Wednesday, July 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மது ஒழிப்புப் போராளி நந்தினி நேற்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்தது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என போராடிய வழக்கறிஞர் நந்தினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கின் விசாரணையின்போது நீதிபதியிடமே கேள்வி கேட்டதால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகிய மது ஒழிப்பு போராளி நந்தினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த நந்தினிக்கு மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடந்தாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நந்தினிக்கு கடந்த 5ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதும், அன்றைய தினம் அவர் சிறையில் இருந்ததால் திட்டமிட்டபடி திருமணம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.