நயன்தாராவை அடுத்து அட்லி-ஷாருக்கான் திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் இந்த படத்தை 180 நாட்களில் முடிக்க அட்லி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஷாருக்கானின் இன்னொரு கேரக்டருக்கு ஜோடியாக சான்யா மல்ஹோத்ரா என்பவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அமீர்கான் நடித்த ’தங்கல்’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியை அடுத்து விஜய்: இளம் இயக்குனர் காட்டில் மழை!

ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கிய இளம் இயக்குனர் ஒருவருக்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரது படங்களையும் அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும்

வருமான வரி வட்டி வழக்கு: தீர்ப்புக்கு பின் சூர்யா தரப்பு எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வருமான வரி வட்டி விலக்கு குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை சற்று முன் பார்த்த நிலையில் நடிகர் சூர்யா தரப்பு

தெலுங்கில் ரீமேக் ஆகும் 'நெற்றிக்கண்': நயன் தாரா வேடத்தில் யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 'பிளையண்ட்' என்ற கொரிய மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான

சொந்த குடும்பத்தை மீட்க முடியவில்லை… மன வேதனையில் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன்னுடைய குடும்பத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்க முடியாமல் போய்விட்டது

வரிவிலக்கு வேண்டி மனு அளித்த நடிகர் சூர்யா.......! தள்ளுபடி செய்த நீதிமன்றம் .....!

நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.