நீட் அறிக்கையை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த டுவீட்!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யா நேற்று இரவு காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கையை பெரும்பாலான திரையுலகினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கையின் பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வீட்டில் ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும். இன்றைய பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களுடைய கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றி விடலாம் என்று கூறியுள்ளார்

மேலும் ’ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்’ என்று அந்த டுவிட்டில் கூறிய சூர்யா, கல்வியை பாதியில் விட்ட மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அகரம் பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளனர் என்றும் இதுவரை வந்த 3030 விண்ணப்பங்கள் தன்னார்வலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது என்றும் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் அகரம் மூலம் படிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘சூரரை போற்று’ படத்தில் கிடைத்த வருமானத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உள்பட சமூக சேவைக்காக அவர் ரூ.3.5 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சூர்யா உள்நோக்கத்துடன் பேசியிருக்க மாட்டார்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து

நீட் தேர்வு குறித்து அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் நேற்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சுந்தர் சியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள்: படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சூர்யாவின் நீட் அறிக்கை குறித்து பாரதிராஜா!

பிரபல நடிகர் சூர்யா நேற்று நீட் குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

'இந்தி தெரியாது போடா' டீசர்ட் அணிந்த மேலும் தமிழ் நடிகை

கோலிவுட் திரை உலகின் பிரபலங்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹிந்தி தெரியாது போடா 'மற்றும் 'I am a தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்கள் அடங்கிய டீஷாட்டுகளை

கொரோனா வைரஸ் பாதித்த செல்… விஞ்ஞானிகள் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!!

கடந்த ஜனவரியில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளையே அதிகமாகப் பேசி வருகிறது.