close
Choose your channels

நித்யா மேனனை அடுத்து தனுஷின் 'D44' படத்தில் இணைந்த இரண்டு நடிகைகள்!

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்க உள்ள 44வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இன்று காலையில் இருந்து இந்த படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளதாகவும், அதனை அடுத்து பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு நடிகைகள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாம் ஏற்கனவே கூறியபடி ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தனுஷின் ’D44' படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.