நிவர் புயலை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்ட தமிழகம்…. பாராட்டி மகிழும் பிரதமர்!!!

 

தமிழகத்தின் வங்கக்கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கடந்த 26 ஆம் தேதி புதுச்சேரி-மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலை ஒட்டி தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தது. இந்த நடவடிக்கைகளினால் பெரிய சோதாரம் எதுவும் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

இந்த நிவர் புயலினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பேரிடரால் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

முன்னதாக நிவர் புயல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என உத்தரவாதம் அளித்து இருந்தார். இந்நிலையல் நிவர் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுவதற்கு மத்திய பேரிடர் குழு தற்போது தமிழகத்தில் ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இப்படி ஒரு சைக்கோ கில்லர்… காரணத்தைக் கேட்டு உறைந்து போன அதிகாரிகள்!!!

ரஷ்யாவின் ஒரு மாகாணத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட அதுவும் வயதான பெண்களை மட்டும் தாக்கி கொலை செய்யும் பல வித்தியாசமான கொலைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது

பழங்கால சின்னங்களை அவமதிப்பதா??? பிரபல மாடல் அழகி கைது!!!

கி.மு. 27 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு எகிப்து பிரமீட்டிற்கு அருகில் இருந்து அந்நாட்டின் மாடல் அழகி ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

ரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். மேலும் கட்சி வேலை என்பது பிரமாண்டமான வேலை என்றும்,

வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களின் தோல்வி: ரஜினிகாந்த் பேட்டி

சற்றுமுன்னர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது

ஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 'தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்