close
Choose your channels

'PS 2' இசை வெளியிட்டு விழா முடிந்ததும் வெளிநாடு பறக்கும் கமல்ஹாசன்: ஏன் தெரியுமா?

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதை அடுத்து இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த படத்தின் டிரைலரை வெளியிடுகிறார். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்தவுடன் அவர் தாய்லாந்து நாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் அங்கு ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் அங்கிருந்து தென்னாப்பிரிக்கா செல்வதாகவும் அங்கு மாஸ் ரயில் ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos