close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டாச்சு, அடுத்து யுவன் பாடலுக்கு போகலாமா? பிரபல தயாரிப்பாளர்!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ’அயலான்’ படத்தின் சிங்கிள் பாடலான ’வேற லெவல் சகோ’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்து பாடிய இந்த பாடல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக தளத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ஏஆர் ரகுமான் பாடல் கேட்டாச்சு, அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு போலாமா? ஏன் ராஜா சார் மற்றும் யுவன் இரண்டும் சேர்த்து போகலாமே? என்று பதிவு செய்துள்ளார். மேலும் இன்று மாலை 5 மணிக்கு இது குறித்த அப்டேட் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

’அயலான்’ படத்தை தயாரித்து வரும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு திரைப்படம் ’டிக்கிலோனா’ என்பதும் சந்தானம் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இதில் இளையராஜாவும் பணி புரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. அனேகமாக இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் அப்டேட் ’டிக்கிலோனா’ பாடல் குறித்த அப்டேட் அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.