ரஜினியை அடுத்து கமல்ஹாசனை சந்தித்த போராட்டக்கார்ரகள்

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லிம் அமைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசனை ஒரு சில இஸ்லாமிய அமைப்பினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று கமல்ஹாசன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேசினார். இவர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு தங்கள் ஆதரவு வேண்டுமென்று கமல்ஹாசனை கேட்டுக் கொண்டனர். எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாகதான் இருப்பேன் என்று உறுதி கூறினார்.

போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடத்திட வேண்டும். அதே நேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்து விடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார். கமலின் கருத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கமல்ஹாசனுக்கு இருக்கும் என தெரிவித்தனர்.

More News

மனிதர்களிடம் இருந்து நாய்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்..! இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.

நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக மனிதலிருந்து விலங்குகளுக்கு பரவிய வைரஸாகும்.

காசியாபாத்தில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..!

ஏற்கனேவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டவர்கள் 29 பேர். இன்று இவரோடு சேர்த்து 30 நபராக எண்ணிக்கை கூடியுள்ளது.

வயதோ 105, ஆனாலும் படித்து ஜனாதிபதியிடம் விருது வாங்கும் கேரளா பாட்டிமார்கள்..!

மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் 'நரி சக்தி புராஸ்கர் 2019' விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.    

“நாம் இருவர் நமக்கு ஆறுபேர்” வெனிசுலா அதிபரின் புதிய அறிவிப்பு

நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்“ என வளரும் நாடுகளில் புது வாசகம் சொல்லப் பட்டு வரும் நிலையில் வெனிசுலாவின் அதிபர் தன் நாட்டுப் பெண்கள் ஒவ்

எனக்கு பெரும் ஏமாற்றம்; மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.