அடுத்தது அஜித் படம் தான்.. சூப்பர் அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் விஜய்க்கு அடுத்து அஜித் படம் தான் என கூறியிருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விழாவில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ். தாணு அவர்கள் 2005 ஆம் ஆண்டு 200 திரையரங்குகளில் வெளியான ’சச்சின்’ படம் தற்போது 355 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தியேட்டரில் ஒளிபரப்பாகும் ஸ்கிரீன் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ’சச்சின்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ’சச்சின்’ வெளியாகும் போது கிடைத்த லாபத்தை விட தற்போது பத்து மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்று கூறினார்.
மேலும் ‘சச்சின்’ படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவான ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகிறேன். இந்த படத்தில் இயக்குனர் இடம் அது குறித்து பேசினேன், அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் அதற்கடுத்ததாக சூர்யா நடித்த ’காக்க காக்க’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் பணியை தொடங்க உள்ளேன். இதற்காக கௌதம் மேனன் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன், அதற்கான வேலையும் நடந்து வருகிறது. அதனையடுத்து 2026 ஆம் ஆண்டு ’தெறி’ மற்றும் ’கபாலி’ படங்களை செய்யும் திட்டமும் உள்ளது என்று கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com