close
Choose your channels

சமந்தாவை அடுத்து ஈஷா மையத்திற்கு சென்ற பிரபல தமிழ் நடிகை!

Thursday, January 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் தெலுங்கு நடிகை சமந்தா சமீபத்தில் கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார் என்பதும் அங்கு ஆதிசிவன் சிலை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பதும் பார்த்தோம்

மேலும் சத்குரு ஜக்கிதேவ் அருகில் சமந்தா உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் ஆன்மீகவாதியாகவே மாறிவிட்ட சமந்தாவின் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் தமிழ் திரையுலகின் மற்றொரு பிரபல நடிகையான அமலாபால், கோவை சத்குரு ஈஷா மையத்திற்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் சத்குரு கூறிய பொன்மொழி ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒலி என்பது படைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும், நீங்கள் ஒலியைக் காட்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தால், படைப்பின் மீது தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். ஒலி என்பது ஒரு மந்திரம் ஒரு எதிரொலி.. ஒரு மந்திரத்தின் பொருள் உங்களுக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை, உங்களை நீங்களே இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். அமலாபாலின் இந்த பதிவு தற்பொது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.