close
Choose your channels

சிவாஜி, கமல், ரஜினியை அடுத்து நடிகர் சரத்குமார் செய்த சாதனை!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம், சிவாஜி கணேசன், உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அடுத்து நடிகர் சரத்குமார் செய்த சாதனை தற்போது வெளிவந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் 150 திரைப்படங்கள் என்ற மைல்கல்லை தொட்ட ஹீரோக்கள் மிகச் சிலரே என்பதும், அவர்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் 150 படங்களையும் தாண்டி நடித்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

நடிகர் சரத்குமாரின் 150வது படம் குறித்து அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. ‘தி ஸ்மைல் மேன்’ என்ற டைட்டிலில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் சரத்குமாரின் 150வது திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஷ்யாம் பிரவீன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதை அடுத்து சரத்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ’சவாலே சமாளி’ 150வது படமாகவும், உலக நாயகன் கமலஹாசனுக்கு ’அபூர்வ சகோதர்கள்’ 150 வது படமாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ‘படையப்பா’ 150வது படமாகவும் அமைந்துள்ள நிலையில் மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வரிசையில் சரத்குமாரின் 150-வது படமும் வெற்றி பெறும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.