close
Choose your channels

சுந்தர் பிச்சையால் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி லாபம் அடைந்த கூகுள் நிறுவனர்கள்

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ பதவியும் தேடி வந்தது என்பது தெரிந்ததே. ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஓய்வு பெற விரும்பியதை அடுத்து அந்த பதவியையும் அவர்கள் சுந்தர்பிச்சைக்கே கொடுத்தனர்.

இந்த நிலையில் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை கடந்த 3ஆம் தேதி பதவியேற்ற செய்தி அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து டிசம்பர் 3ஆம் தேதி ஆல்பபெட் நிறுவனத்தின் பங்கு ஆயிரத்து பங்கு விலை $1295 ஆக இருந்தது. ஆனால் ஒரே நாளில் அதாவது டிசம்பர் 4ஆம் தேதி ஆல்பபெட் நிறுவனத்தின் பங்கு $1325 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 2.3% நிறுவனத்தின் பங்கு உயர்ந்தது என்பதும், இந்த உயர்ந்த பங்குகளின் மதிப்பின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை பதவியேற்ற செய்திக்கே அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்றால் இன்னும் இந்த நிறுவனத்தை சிறப்பாக சுந்தர் பிச்சை வழிநடத்திச் என்றால் அந்த நிறுவனத்தின் பங்கு விற்பனை விலை உச்சத்தை தொடும் என்று அமெரிக்க பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.