தமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்தோம்.

கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, ’ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தை கட்டிக்கோ, பிரபுதேவா நடித்த ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’முக்காலா முக்காபுலா’ மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான புட்டபொம்மா ஆகிய பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கை அடுத்து ஹிந்திக்கு காலடி வைத்துள்ளார் டேவிட் வார்னர். பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அக்சயகுமாரின் ’ஹவுஸ்புல் 4’ என்ற படத்தில் இடம்பெற்ற ’பாலா பாலா’ என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் சூப்பராக அக்சயகுமார் போலவே நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளுக்கு அவர்கள் வெளியே வந்தவுடன் வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

மேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்! பரபரப்பு தகவல்

இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். இம்மாநிலத்தில் மட்டும் 47190 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்

 சூர்யா நடித்த 'மாஸ் என்ற மாசிலாமணி' கார்த்தி நடித்த 'சகுனி' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ்.

நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது